"புற்றுநோய்க்கு எதிராக போராட முடியும்" கே.எம்.சி.எச் சார்பில் உலக புற்றுநோய் தினம் கையெழுத்து பிரச்சாரம்


புற்றுநோய் என்பது ஒரு பயங்கரமான நோய் அல்ல, இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதால், முற்றிலுமாக குணப்படுத்த முடியும் என்ற விழிப்புணர்வை அதிகரிக்க, கே.எம்.சி.எச் மருத்துவமனை உலக புற்றுநோய் தினமான 04.02.2017 இன்று “கோயம்புத்தூர் விழா” குழுவினர்களுடன் இணைந்து, கோயம்புத்தூர் மத்திய இரயில் நிலையத்தில் ஒரு கையெழுத்து பிரச்சாரம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு கையெழுத்து பிரச்சாரத்தினை தலைமை விருந்தினராக கோயமுத்தூர் போக்குவரத்து காவல் துறை துணை ஆணையர் சரவணன் தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சி பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கே.எம்.சி.எச்- ன் விரிவான புற்றுநோய் பராமரிப்பு மைய அணியின் மருத்துவர்கள் மூலம், புற்றுநோயை எந்த சிக்கலான நேரங்களில் சமாளிக்க முடியும் என்ற தெளிவான செய்தியை கொடுத்து நிச்சயமாக புற்றுநோய்க்கு எதிராக போராட முடியும் என்பதே ஆகம். புற்றுநோயை எதிர்த்துப் போராடவும், குணப்படுத்தவும், கட்டுப்படுத்தவும், சுகாதாரத்துறை ஒரு பெரிய அளவில் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதன் தேவைகளைப் புரிந்து, ஒரு ஆரோக்கியமான சமூகத்தின், குறிப்பாக புகைபிடிப்பவர்களை முன்னிலைப்படுத்தி ஒரு வழக்கமான அடிப்படையில் புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை இப்பணியில் ஈடுபட்டுள்ளது. 

கே.எம்.சி.எச்  மருத்துவமனையில் இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ஆண், பெண்களுக்கான சிறந்த உடல்பரிசோதனை, மிகக்குறைந்த கட்டணத்தில் (ரூ.999க்கு) செய்து கொடுக்கப்படுகிறது. கோயம்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆண், பெண்கள் இந்த முகாமில் கலந்து கொள்ள முன்வந்தனர். இந்த 2017-ம் ஆண்டிற்குள் கோயம்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்தது 25,000 பெண்களுக்கு “மார்பக உடல்நலம்” மற்றும் “கர்பப்பை வாய் நலம்” பற்றிய விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதே கே.எம்.சி.எச் மருத்துவமனையின் நோக்கமாகும்.

 

இதனை கே.எம்.சி.எச் இயக்குனர் அருண் பழனிசாமி, கோவை இரயில் நிலையம் ஸ்டேஷன் மாஸ்டர் சின்னராஜு மற்றும் “கோயம்புத்தூர் விழா” அமைப்பு குழுவினர் ஐஸ்வர்யா, கே.எம்.சி.எச் டீன் குமரன் ஆகியோர் முன்னிலையிலும் காலை 8 மணிக்கு துவங்கியது. இதில் பொதுமக்கள் பலர் தங்களின் கையெழுத்துக்களை பதிவு செய்தனர். பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தகவல் துண்டறிக்கைகள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கே.எம்.சி.எச் இயக்குனர் அருண் பழனிசாமி பெண்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில், புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடரும் என்று உறுதியளித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...